• Jul 04 2024

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று கேரக்டர்கள்.. ‘கோட்’ படத்தில் திடீர் ட்விஸ்ட்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் ‘கோட்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இறுதிக்கட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்தி வருகிறார் என்பதும் ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் தளபதி விஜய் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தான் இதுவரை செய்திகள் வெளியான நிலையில் தற்போது வெளியான தகவலின்படி இந்த படத்தில் அவர் மூன்று கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லி  இயக்கத்தில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தில் மூன்று கேரக்டர்களில் விஜய் நடித்த நிலையில் மீண்டும் அவர் மூன்று வருடங்களில் நடிக்க உள்ளது விஜய் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ‘கோட்’ படத்தின் தந்தை ,மகன் ஆகிய இரண்டு விஜய்யின் லுக் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவது லுக் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாகவும் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இந்த மூன்றாவது லுக்கின் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement