• May 02 2026

என்னால் ஓட்டு போட முடியவில்லையே... - விஜய்க்காக வருத்தப்படும் நடிகை ஐஸ்வர்யா.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ள விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக முழுமையாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் அவர் போட்டியிட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த தேர்தலில் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.


தேர்தல் முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் தாக்கம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்கான முக்கியமான சோதனையாக இந்த முடிவுகள் பார்க்கப்படுகின்றன. ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் இந்த முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. “தமிழகத்தில் தவெக வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. எனக்கு விஜய் மிகவும் பிடிக்கும். நான் கேரளத்தை சேர்ந்தவள் என்பதால் இங்கு ஓட்டு போட முடியாதது வருத்தமாக உள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த வெளிப்படையான ஆதரவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது விஜய்யின் ரசிகர் வட்டம் மாநில எல்லைகளைத் தாண்டி இருப்பதையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.


Advertisement

Advertisement