தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது திரை உலகத்தைத் தாண்டி கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சிறுவயதிலிருந்தே கார் மற்றும் பைக் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அவர், தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவது ரசிகர்களை பெருமைப்படுத்துகிறது.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் பல்வேறு நாடுகளில் நடைபெறும் ரேசிங் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். சமீபத்தில் 2025ஆம் ஆண்டுக்கான “ஜென்டில்மேன் டிரைவர்” விருது அவருக்கு வழங்கப்பட்டதும், அவரது சாதனைகளுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை போட்டியின் 2வது சுற்று பிரான்சில் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான சர்வதேச கார் ரேசிங் போட்டியில் அஜித் குமாரின் அணி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையான ரேசர்கள் பங்கேற்கும் இந்த போட்டி, மிகுந்த போட்டி நிலை கொண்டதாக இருக்கும்.
இந்த போட்டியிலும் அஜித் குமார் தனது திறமையை நிரூபித்து மேலும் ஒரு வெற்றியை இந்தியாவுக்கு கொண்டு வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Listen News!