• Apr 30 2024

விஜய்யை சந்திக்க மறுத்தாரா பிரேமலதா? ‘கோட்’ படத்தில் நினைத்தது நடக்குமா?

Sivalingam / 2 weeks ago

Advertisement

Listen News!

தேமுதிக தலைவர் பிரேமலதாவை பலமுறை சந்திக்க வெங்கட் பிரபு முயற்சித்தும் இதுவரை நடைபெறவில்லை என்றும் விஜய் கூட பிரேமலதாவை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட் ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜி மூலம் ஒரு சில காட்சிகளில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரேமலதாவிடம் அனுமதி கேட்பதற்காக வெங்கட் பிரபு சில முறை முயற்சித்ததாகவும் ஆனால் தேர்தல் பிசி காரணமாக பிரேமலதா அவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் ஒரு நாள் சந்திக்கலாம் என பிரேமலதா கூறியதாகவும் அதே போல் விஜய்யும் சந்திக்க முயற்சித்த போது இதே பதில் தான் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பின் வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து பிரேமலதாவை சந்திக்க இருப்பதாகவும் விஜயகாந்தை தங்களது ’கோட்’ படத்தில் சில காட்சிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜயகாந்த் நடித்த சில படங்களில் விஜய் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த ’செந்தூரப்பாண்டி’ என்ற படத்தில் விஜயகாந்த் நடித்ததால் தான் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்றி கடனுக்காக தற்போது விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜி மூலம் தனது படத்தில் இணைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தனது அரசியல் எதிர்காலத்திற்கும் அந்த காட்சிகள் உதவும் என்று அவர் எண்ணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ’கோட்’ படத்தில் விஜயகாந்த்தை பயன்படுத்த பிரேமலதா அனுமதி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement