தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான தளபதி விஜய், தற்பொழுது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் அதேசமயம் ஆதரவும் கிளம்பியுள்ளன. விஜயின் அரசியல் பயணத்துக்கு அவரது ரசிகர்கள் ஆதரவளித்தலும் பல எதிர்ப்பு விமர்சனங்களும் எழுந்துள்ளன. விஜய் ஏற்கனவே தனது 'தளபதி மக்கள் இயக்கம்' மூலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் விஜயின் அரசியல் பற்றி கதைத்துள்ளார். அதில் நடுவர் ஒருவர் வைரமுத்துவிடம் , விஜயின் அரசியலுக்குள் சென்றது பற்றி கேட்டிருந்தார். அதற்கு வைரமுத்து பதில் கூறுகையில், இது ஒரு பொது வாழ்க்கை அதனால், அவர் நடக்கும் பாதை மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தார்.
அத்துடன் அரசியல் குறித்து கதைத்து நல்ல நட்பை கெடுக்க விரும்பவில்லை என்று கூறியதுடன் உண்மையை சொல்லாமல் பொய்யனாக இருக்கவும் விருப்பமில்லை என மறைமுகமாக கூறிவிட்டு சென்றுள்ளார் வைரமுத்து.
அத்துடன் வைரமுத்துவின் இந்த கருத்து விஜயின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடும். மேலும் அவரது அரசியல் பயணம் வெற்றி காணுமா? மக்கள் ஆதரவை பெறுமா? என்பது இனி வரும் காலத்தில்தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!