• May 01 2024

மீண்டும் அருண் காமராஜுடன் கூட்டணி அமைக்கும் உதயநிதி- லேட்டஸ்டாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் தான் உதயநிதி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.இப்படத்தில் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தை அருண் காமராஜா இயக்கியிருந்தார்.போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் பேவியூ புராஜட்சுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் இந்தப் பட்த்தை தயாரித்திருந்தது.இந்நிலையில் இந்தப் படத்தின் 50ம் நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் போனி கபூர், உதயநிதி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் போனி கபூர் உள்ளிட்டவர்கள், படத்தின் இணை தயாரிப்பாளர்கள் செண்பகமூர்த்தி, அர்ஜுன் துரை ஆகியோருக்கு தங்கச் சங்கிலியை அணிவித்தனர். இயக்குநர் அருண்ராஜா காமராஜூக்கும் மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி இந்தப் படத்தில் அருண்ராஜாவுடன் இணைந்து பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் அருண்ராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் படத்தில் நடிப்பது முதலில் கடினமாக இருந்ததாகவும் பிறகு சரியாகி விட்டதாகவும் உதயநிதி மேலும் கூறினார்.இந்தப் படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி, நல்ல படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பை தொடராமல் முழுநேரமாக அரசியலில் ஈடுபட உள்ளதாக உதயநிதி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சிறப்பான கதைகள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது அருண்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement