• Apr 26 2024

நிதி அகர்வாலுக்கு முத்தம் கொடுக்க மறுத்த உதயநிதி -கலகத் தலைவன் படத்தின் புதிய அப்டேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் உதயநிதி. இவர் தற்பொழுது கலகத் தலைவன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.அதில் அவர் கூறிய விடயங்கள் வைரலாகி வருகின்றது. அதாவது நான் நடிக்கப் போகிறேன் என்று என் மனைவி கிருத்திகாவிடம் கூறியபோது என்ன திடீரென என்று கேட்டார். அப்போது, நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றுதான் திருமணத்திற்கு முன் வாக்குறுதி கொடுத்தேன். நடிக்க மாட்டேன் என்று கூறவில்லையே என்று சொல்ல, கிருத்திகாவும் நான் நடிப்பதற்கு சம்மதித்தார். அப்பாவிடம் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அம்மாவிற்குதான் நான் நடிப்பது பிடிக்கவில்லை. மாமன்னன் கடைசி படம் என்று கூறியிருந்தேன் ஆனால் இப்போது ராஜ்கமல் நிறுவனத்திற்கு படம் நடிக்க ஒப்பந்தமானதால் ஏன் என்று அம்மா கேட்டார்.


கிரிஞ், பூமர் போன்ற சொற்கள் எனக்கு சுத்தமாக தெரியாது. ஒரு முறை நான் விநியோகம் செய்த படத்தை நானும் மாரி செல்வராஜும் ஒன்றாக பார்த்தோம். ஒரு காட்சி வரும்போது கிரிஞ் காட்சி என்று கூறினார். மீண்டும் இன்னொரு காட்சிக்கும் அதே சொல்லை பயன்படுத்தினார், எனக்கு புரியாமல் அவரிடம் கேட்க, உங்கள் மகனிடம் கேளுங்கள் என்று சொன்னார். ஃபோன் செய்து கேட்க நேரமில்லை, நீங்களே கூறுங்கள் என்று சொன்னபோதுதான் எனக்கு விளக்கினார்.

அதேபோல வீட்டில் கிருத்திகாவை பூமர் அம்மா என்று எங்களது மகன் அழைக்கிறான். ஏன் அப்படி அழைக்கிறான் என்று கேட்டபோது, முன்பு நடந்த பழைய கதைகளை கூறியதால் பூமர் அம்மா என்று கிண்டலடிப்பதாக கிருத்திகா கூறினார். கிருத்திகா இயக்கியிருந்த பேப்பர் ராக்கெட் திரப்படம் வெற்றி பெற்றதால் தற்சமயம் அதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். நான்தான் தயாரிக்கிறேன் என உதயநிதி தெரிவித்துள்ளார்.


கலகத் தலைவன் திரைப்படத்தில் ஒரு முத்த காட்சி இருந்தது.ஆனால், படப்பிடிப்பின்போது உண்மையாக கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கச் சொன்னார். நான் முடியவே முடியாது என்று மறுத்ததால் வேறு வழியின்றி கேமரா கோணத்தில் மாற்றி எடுத்தார். படத்தில் நான் வரும் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும். ஆராவ்விற்குதான் நிறைய காட்சிகள் இருக்கிறது என்று பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார் உதயநிதி.


Advertisement

Advertisement

Advertisement