• May 04 2024

அடுத்த முறை ஒழுங்காக முயற்சி செய்யுங்கள்- கடும் கோபத்தில் பதிலடி கொடுத்த யாஷிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 இல் பங்கு கொண்டதன் பின்னரே அனைவரிடமும் மிகவும் பிரபல்யமானார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்தின் காதல் வலையில் சிக்கி சில சர்ச்சைகளையும் சந்தித்தார். அத்தோடு அண்மையில் தனது தோழியுடன் காரில் பயணித்த போது இவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் சில காயங்களுக்கு உள்ளானார்.


தற்பொழுது பூரண குணமடைந்த இவர் சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால் அதிகமாக அவர்ச்சிப் புகைப்படங்களையே அதிகம் பதிவிட்டு வருகின்றார்.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.6M ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தினமும் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியும் வருகின்றன.


யாஷிகா எடுத்த போட்டோவை எடிட் செய்த சிலர் அதில் அலமாரியில் சில செ*ஸ் டாய்கள் இருப்பது போல மாற்றி இணையத்தில் உலவ விட்டு இருக்கின்றனர்.அதை பார்த்து கடும் கோபமான யாஷிகா, உண்மையான போட்டோவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement