• May 07 2024

அந்தப் படம் மட்டும் ஹிட்டாகல என்றால் த்ரிஷா கண்டிப்பாக சினிமாவை விட்டு போயிருப்பார்- பயில்வான் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காரெக்டர் ரோலில் நடித்து வந்தவர் தான் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இந்த படத்தின் கதைக்களம் வித்யாசமானது என்றாலும் கூட, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து 'மனசெல்லாம்' படத்தில் நடிகை த்ரிஷா நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.

அடுத்தடுத்து இரண்டு தோல்வி படங்களை கொடுத்ததால், ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.பின்னர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக, 'சாமி' படத்தில் நடிக்க கமிட் ஆனார்.இப்படம் அவருக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் த்ரிஷா இப்படம் வெளியாக முதல் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதில் த்ரிஷாவிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே? இப்படம் வெற்றி பெறுமா என்று கேட்டிருக்கின்றார். அதற்கு த்ரிஷா ஆவேசமாக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஒரு வேளை ஓடவில்லை என்றால் திரை உலகில் இருந்தே விலகி விடுவேன் என த்ரிஷா கூறியதாகவும், தெரிவித்துள்ளார். எனவே இப்படம் ஓடவில்லை என்றால் த்ரிஷா சினிமாவை விட்டு விலகி இருப்பார் என்று, இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த த்ரிஷா, தெலுங்கிலும் பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த படங்கள் வெற்றி பெற்றது. பின்னர் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர் ஒருவரின் காதல் வலையில் சிக்கிய த்ரிஷா, அவருடன் டேட்டிங் செய்த நிலையில்... இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்று, இந்த திருமணம் நின்று போனது. பின்னர் தொழிலதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து த்ரிஷாவின் திருமணம் நின்றது. இப்படி தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு சோதனைகளை த்ரிஷா சந்தித்துள்ளார்.


த்ரிஷா வயது அதிகரித்ததன் காரணமாக, இடையில் இரண்டு வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது 96 திரைப்படம் தான். இந்த படத்தில் ஒரு சீனியர் நடிகையாக இருந்தாலும் கூட விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து மீண்டும் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார்.  இப்படி பல்வேறு போராட்டங்களையும் கடந்து சுமார் 22 வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நிலைத்து நிற்கும் த்ரிஷாவன் தன்னம்பிக்கையை புகழ்ந்து தள்ளியுள்ளார் பயில்வான் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement