• May 10 2024

இனிமேல் சத்தியமாக நடிக்க வரமாட்டேன் என்று கூறி விட்டேன்- பொன்னியின் செல்வன் குறித்து பேசிய த்ரிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!


பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பால்கள் போஸ்டர் என்பன வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன் ஆகியோர் பிரபல  சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தொகுத்து வழங்கினார். மேலும், நட்சத்திரங்கள் அனைவரும் பல சுவாரஸ்ய தகவல்களை பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பாக பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை த்ரிஷா, "ஒரு 10, 15 நாட்கள் படப்பிடிப்பு சென்ற பின்னர், இனி அடுத்து பீரியட் ஃபிலிம் சத்தியமாக நடிக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன். ஆனால், நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தது. நிறைய விஷயங்களை சவாலுடன் ரசித்தபடியே செய்தோம்" என கூறினார்.


தொடர்ந்து, தான் ராஜ ராஜ சோழனாக நடிக்க போவது பற்றி இயக்குநர் மணிரத்னம் சொன்னதும் தனது ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பது பற்றி பேசிய நடிகர் ஜெயம் ரவி, "ஏதோ Surreal தருணமாக இருந்தது. அதன் பின்னர் மணி சார் நிஜமாக தான் சொல்கிறாரா என அவரிடமே மீண்டும் கேட்டு உறுதி செய்தேன். 

அவர் அப்படி சொன்னதும் மிகவும் சந்தோசமாக இருந்தது.என்னுடைய சிறு வயதில், எனது தாய் ஒரு கதையாக இதனை சொல்லி தந்திருக்கிறார். வாடகை சைக்கிள் வாங்கி பொன்னியின் செல்வன் புக்கை படிப்பதாக எனது தந்தை கூறி உள்ளார். அதன் பெருமை எனக்கு தெரியும். அப்படி இருக்கையில், நான் பொன்னியின் செல்வனாக நடிக்கிறேன் என்பது ஒரு Surreal தருணமாக இருந்தது" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement