• May 10 2024

'PS-2' பட ப்ரோமோஷன் நேரத்தில்.. ட்விட்டரில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவிக்கு நடந்த கொடுமை... ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பல இடங்களுக்கு செல்வது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்தவகையில் ட்விட்டரில் தமது பெயரை மாற்றி உள்ளனர். அதாவது த்ரிஷா குந்தவை எனவும், கார்த்தி வந்தியத்தேவன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் பெயரை மாற்றி இருந்தனர். ட்விட்டரின் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ ஸ்டிக் மறைந்து விடும். இதனையடுத்து தற்போது த்ரிஷா மற்றும் ஜெயம்ரவியின் ப்ளூ ஸ்டிக் ட்விட்டரிலிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement