• May 10 2024

கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. திடீரென வீட்டுக்கு வந்த பாக்கியா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

கோபி ராதிகா வீட்டுக்குச் சென்று அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது வெளியே சென்றிருந்த ராதிகா வீட்டிற்கு வருகின்றார். எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா நம்முடைய வாழ்க்கையை தொடங்கலாம் என கோபி முட்டிபோட்டு கெஞ்சிக் கேட்க ராதிகா கோபம் தணியாமல் வெளியே போக சொல்லி சத்தம் போடுகிறார். மேலும் போக முடியாது என கோபி பிடிவாதம் பிடிக்க அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் ராதிகா.

இதனையடுத்து மீண்டும் கோபி ராதிகாவிடம் பேச முயற்சித்தும் ராதிகா செவி கொடுக்காததால் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

மேலும் இந்தப் பக்கம் ஜெனி வீட்டில் இருக்கப் போவதாக சொல்லி பாக்கியா வீட்டில் இருப்பவர்களையும் அழைக்க ஜெனி இப்போதைக்கு வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்.

இதன் பிறகு அந்த வீட்டில் இருக்க எல்லோரும் வெளியே சென்று வரலாம் என சொல்லி செழியனிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கிறார். ஆனால் செழியன் வழக்கம் போல என்னால் செலவு செய்ய முடியாது என சொல்லி விடுகிறார்.

பின்னர் பாக்கியா ராதிகா வீட்டுக்கு சென்று பிரச்சனை குறித்து விசாரிக்க அவருடைய அம்மா ராதிகாவிடம் இவர் கோபி விவாகரத்து வாங்கிட்டு சந்தோஷமா இருக்க கூடாது என இங்க வந்து குட்டையைக் குழப்ப வந்திருக்கா என பாக்கியா பற்றி தவறாக பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement