• May 02 2024

இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல- மகத் மனைவி சொன்ன முக்கிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் அஜித் சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் மகத்.இவர் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார்.

2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இதன் பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் மூலம் மகத் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த பிரபலத்தினால் தான் மகத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.இவ்வாறு இருந்தாலும் இவரை பட்டி தொட்டி எங்கும் பரவ வைத்தது பிகபாஸ் நிகழ்ச்சி தான்.

அத்தோடு , இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அடிக்கடி மிகவும் நெருக்கமாக பழகி இருந்தார்கள். இதனால் மஹதின் காதலி பிராச்சி காதலை முறித்துக் கொண்டதாக பலரும் கூறி பின் எப்படியோ இருவரும் சமாதானம் ஆனார்கள். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் பிராச்சியும் காதலித்து இருந்தார்கள்.

இதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மஹத் – பிராச்சி தம்பதியினருக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.மஹத் தன் மகனுக்கு ‘அதியமான்’ என்று பெயர் வைத்து இருக்கின்றார். அதுமட்டும் இல்லாமல் மகத் தன் மகனின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மகத் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் மகத் நடித்து இருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மகன் பிறந்து ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து முதலாவது பிறந்த நாளை மகத் மிகவும் சிறப்பாக தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார். அத்தோடு தங்கள் மகனுக்கு மொட்டை அடித்து இருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கும் பிராச்சி ‘இந்து வேதங்களின்படி மொட்டை அடிப்பது குழந்தையின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அது அவர்கள் உடலில் உள்ள உள் உஷ்ணங்களை வெளிடியிட்டு குழந்தையை குளிர்ச்சியாக வைத்து, நரம்பு மற்றும் மூளை வளர தூண்டுகிறது’ என்று அறிவியில் உண்மையையும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement