• May 04 2024

உன்ன பாத்து அங்க போறவங்க சிரிக்கிறாங்க – கேலி செய்த பெண்ணுக்கு யாஷிகா கொடுத்த தக்க பதிலடி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். இதன் பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரியளவில் பிரபலமானர்.

அத்தோடு  இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். இதன் பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.அத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருந்தார். மேலும் இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடியவில்லை.

இதனால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாதென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம்.எனினும் தற்போது விபத்தில் இருந்து தேறி வந்துள்ள யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.


சமீபத்தில் எஸ் ஜெ சூர்யா நடிப்பில் வெளியான ‘கடமையை செய்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தையே பெற்று இருந்தது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதே போல அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து சென்று அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


எனினும் அந்த வகையில் சமீபத்தில் இவர் குளிர் அதிகம் உள்ள நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது அங்கே வீதியில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் இதை பார்த்த சில பெண் நெட்டிசன் ஒருவர் ‘அங்க இருக்க எல்லாரும் உன்ன மாதிரி பாக்குறாங்க, சிலர் சிரிக்கிறாங்க ‘ என்று கமன்ட் செய்தார். அதற்கு யாசிகா ‘என்ன மாதிரி அவங்க போக முடியல அதுனால சிரிக்கிறாங்க, இப்படி நடப்பது எளிதல்ல, அதுனால அவங்க அசந்துபோய்ட்டாங்க, உனக்கு பொறாமை’ என்று பதிலளித்துள்ளார். அதே போல மற்றொரு பெண் இன்ஸ்டா வாசி ஒருவர். 2 டிகிரி ஒரு ஸ்வட்டரவாது போட்டு இருக்கனும் என்று கூற, அதற்கு யாஷிகா ‘நான் என்ன ட்ரெஸ் போடனும்னு எல்லாரும் சொல்றாங்க, இவங்க பேச்ச எல்லாம் கேட்ட அது தான் என் கடைசி நாள்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement