• May 19 2024

நான் நிறையப் படங்களில் நடிக்காதமைக்கு காரணமே இதுதான்... உண்மையைக் கூறிய ஹிப்ஹாப் ஆதி..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

ஒரு இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த ஹிப்ஹாப் ஆதி சமீபகாலமாக படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் 'வீரன்' என்ற படத்தில் நடித்து வருகின்றார்.


காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படமானது வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள பேட்டி ஒன்றில் ஹிப்ஹாப் ஆதி பல விடயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கின்றார். அதாவது "நான் அதிக படங்களில் நடிக்காததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு நான் அதன் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனகெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும்" என்றார்.


அத்தோடு "நட்பே துணை படத்துக்காக விளையாட்டு பலவும் கற்றேன். வீரன் படத்தில் குதிரை இருப்பதால் அதற்காக நான் குதிரை ஏற பயிற்சி கூட எடுத்தேன். இரண்டு வருடம் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக கடுமையாக படிக்கச் சென்றேன். இதனாலேயே அதிக படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை என அப்பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement