• May 11 2024

Life-ல நான் பண்ண பெரிய தப்பு இது தான்.."- கார்த்திகை தீபம் நடிகர் கார்த்திக் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கனாகாணும் காலங்கள் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் கார்த்திக் ராஜ். இவர் இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.இது தவிர சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்தார். இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் கார்த்திகை தீபம் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நீங்க லைப்ல பண்ணின பெரிய தப்பு என்றால் எதை சொல்லுவீங்க என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய அவர் பிறந்திருக்கவே கூடாது. பிறந்த காரணத்தினால் தானே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கு.பிறக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை தானே யாரும் நம்ம கிட்ட எதுவும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.நாம பண்ணுற எதையும் தப்பு என்றும் சொல்லி இருக்கமாட்டாங்க என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement