• May 18 2024

என் மகளின் கடைசி ஆசை இது தான்: கண்ணீர் சிந்தியபடி சீரியல் நடிகையின் அம்மா விடுத்த வேண்டுகோள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட நடிகை வைஷாலி தாக்கரின் கடைசி ஆசையை அவரின் அம்மா கூறி கண்கலங்கி உள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நடிகை வைஷாலி தாக்கரின் கடைசி ஆசை என்னவென்பது  தற்போது தெரிய வந்திருக்கிறது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வைஷாலி தாக்கர் அக்டோபர் 16ம் தேதி இந்தூரில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. காதல் விவகாரம் தொடர்பாக வைஷாலி இப்படி ஒரு முடிவு எடுத்தது தெரிய வந்துள்ளது. வைஷாலி கடைசியாக எழுதிய கடிதமும் கிடைத்தது.

அத்தோடு தன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தொழில் அதிபரான ராகுல் நவ்லானி தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக கடிதத்தில் எழுதியுள்ளார் வைஷாலி. இவ்வாறுஇருக்கையில் தன் மகளுக்கு நியாயம் வேண்டுமென்று வைஷாலியின் தாய் அனு கவுர் தாக்கர் கூறியுள்ளார்.



அனு கூறியதாவது, ராகுல் வைஷாலிக்கு தொல்லை கொடுத்து வந்தது அவரின் மனைவிக்கு தெரியும். இருப்பினும் வைஷாலியால் தன் திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்று அந்த பெண் புகார் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு வைஷாலி நார்மலாக இருந்தார் என்றார்.


அனு கவுர் மேலும் தெரிவித்ததாவது...திடீர் என்று வைஷாலி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அத்தோடு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வைஷாலி இந்தூரில் இருந்தார். வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வைஷாலிக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டோம் என்றார்.



வைஷாலியின் திருமணத்தை நிறுத்த ராகுல் முயற்சி செய்து வந்தார்.அத்தோடு  ராகுலுக்கு தண்டனை கிடைத்ததால் தான் தனக்கு நியாயம் கிடைக்குமென்று வைஷாலி தன் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். அது தான் அவரின் கடைசி ஆசை ஆகும் என அனு கவுர் தாக்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement