இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் திகழ்பவர் தான் நடிகை குஷ்பு.முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்தவர். மேலும் இவரது நடிப்பில் பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.அத்தோடு கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து நடிர்களுடனும் இவர் நடித்துள்ளார்.
நடிப்பு, அழகு, கவர்ச்சி, நடனம் என இவரின் சிறப்பால் கவரப்பட்ட ரசிகர்கள், இவரை கொண்டாடினர். மேலும் இவருக்கு கோயிலும் கட்டினர். இட்லிக்கு குஷ்பூ இட்லி என பெயரிட்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து சுந்தர் சியை மணந்துக் கொண்டு தமிழக மருமகளாக செட்டிலான போது அதை கொண்டாடினர்.
திருமணத்திற்கு பின்னர் குஷ்பூவின் செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கவே செய்தது. நடிப்பை கைவிடாத இவர், சினிமா தயாரிப்பாளர், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடுவர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முகங்களை காட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அத்தோடு கலர்ஸ் தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த இவரது மீரா சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனிடையே சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இவர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அத்தோடு தன்னுடைய குழந்தைகள், குடும்பம், கணவர், தோழிகள், கொண்டாட்டம் என தன்னுடைய வாழ்க்கையை கொண்டாடி வருகின்றார். இதனிடையே, கொழுகொழுவென இருந்த தன்னுடைய அடையாளத்தையும் இவர் மாற்றியுள்ளார்.
இதற்கு காரணம் கொரோனா தொற்று தான் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பூ. மேலும் இந்த காலத்தில் வீட்டில் அதிகமான பொழுதை கழித்த தான், வீட்டின் அனைத்து வேலைகளையும் சோலாவாக செய்ததாகவும், யோகா, மெடிடேஷன் என பொழுதை சிறப்பாக அமைத்துக் கொண்டதாகவும் அதுதான் தான் ஒல்லியாக மாற காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது மோகனுடன் ஹரா படத்தில் நடித்து வருகிறார் குஷ். மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, குஷ்பூவின் உடல் எடையை குறைக்க கேட்டுக் கொண்டதாகவும், அதன் பொருட்டே குறுகிய காலத்தில் அவர் தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, கொழுகொழுவென இருந்தாலும் ஸ்லிம்மாக இருந்தாலும் குஷ்பூ அழகுதான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!