• Apr 14 2026

கொஞ்சம் கூட சென்ஸே இல்லையா? - பெண் பார்க்க வந்த இடத்தில் விஜய் காட்டம்..

shali / 2 days ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலில் இனி நிகழவிருப்பும் எபிசொட்டிற்கான ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், காவேரி விஜய்க்காக பெண் பார்க்கிறார். 

அந்தப் பெண் விஜய்யைப் பார்த்தவுடனே தனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லுறார். மேலும், உங்க குழந்தை டெய்லி உங்க கூடவா தூங்குது என்று கேட்கிறார். அதுக்கு விஜய் கோபமாக கொஞ்சம் கூட சென்ஸே இல்லாமல் கேள்வி கேட்கிறீங்க என்று சொல்லுறார்.


அதைத் தொடர்ந்து, விஜய் காவேரி கிட்ட போய் இந்தப் பொண்ணு எல்லாம் எனக்கு செட்டாகாது என்று சொல்லுறார். பின் காவேரி இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கேட்கிறார். 

அதைக் கேட்ட விஜய் உங்களுக்கும் கல்யாணம் ஆகல என்று உங்க அம்மா கவலைப்படுறாங்க அதுக்காக நான் மாப்பிள்ளை பார்க்கணும் என்று கிளம்பிட்டா இருக்கன் என்று கேட்கிறார். அதனை அடுத்து காவேரி நீங்க மாப்பிள்ளை பார்க்கிறதா இருந்தால் பாருங்க யாரு வேணாம் என்று சொன்னாங்க என்கிறார். அதைக் கேட்ட விஜய் ஷாக் ஆகுறார். 

Advertisement

Advertisement