• Apr 27 2024

வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிய மற்றுமொரு நடிகை-சீரியலின் ராசி அப்பிடி...குமுறும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல.இந்த சீரியல் அண்ணன் தங்கை பாசத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட தொடர்.

இந்த தொடரில் துளசி – சின்ராசு இரண்டு பேருமே முதன்மை கதாப்பாத்திரம். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த தொடரில் துளசி கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்தவர் ஸ்வேதா கால்கே.

அவர் திடீரென சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரை தொடர்ந்து சின்ராசு ரோலில் நடித்த தமன் வெளியேறினார். அதற்கு பிறகு தற்போது வேறு நடிகர்கள் அந்த ரோல்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இரண்டாவது லீட் காரெக்டரில் இருந்த பொன்னி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த ப்ரீத்தி குமார் வெளியேறி உள்ளார்.

அதனை அவரே உறுதிப்படுத்தி தனது இன்ஸ்டா ஸ்ரோரியில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement