தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் தான் பேரரசு.இவர் திருப்பாச்சி, சிவகாசி ,திருப்பதி, பழனி, திருத்தணி ,பந்தயம் எனப் பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். நேற்று நடந்த ஆரகன் பட விழாவில் கலந்து கொண்ட இவர் சில விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல, அது ஒரு சவால். எம்ஜிஆர், கமல் முயற்சித்து முடியாமல் போனதை, மணிரத்னம் சாதித்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும் குடும்பப்பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.. இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் கவர்ச்சி பக்கம் செல்லவே கூடாது. அப்படி தடம்மாறி செல்பவர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும்.
உங்கள் பலமே அந்த குடும்பப் பாங்கு தான். அப்படி மாறினால் அவர்களது மார்க்கெட்டே காலியாகி விடும்”. என்று வேண்டுகோள் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!