பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 18வது நாளை எட்டியுள்ளது. கடந்த இரு வாரங்களை சிறப்பாக முடித்து 3வது வாரத்தில் நடைபோட்டு வருகிறது.நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துக் கொள்ளும் அதேவேளையில் போட்டியென்று வந்துவிட்டால் எதையும் விட்டுக் கொடுக்காத மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த டாஸ்க்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது டால் டாஸ்கில் ஈடுபட்டுள்ளனர். இந்த டாஸ்கில் பொம்மைகளுக்காக போட்டியாளர்கள் அடித்துக் கொள்வது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இடையிடையே அவர்களின் வாக்குவாதங்களையும் போட்டிகளையும் சண்டைகளையும் பார்க்க முடிகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று சாந்தி மாஸ்டர் வெளியேறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜிபி முத்து தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக்கூறி வெளியேறினார்.
தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் 7 போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர். இதில் டேஞ்ஜர் ஜோனில் இருப்பது அசல் கோளார், ஆயிஷா மற்றும் அசீம் ஆகிய மூவர் தான். அசல் கோளார் தொடர்ந்து பெண்களிடம் சில்மிஷம் செய்து வருவதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்கிற முனைப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
மறுபுறம் அசீமுக்கும் குறைந்த அளவிலான வாக்குகளே கிடைத்துள்ளன. அவர் கடந்த வாரம் ரெட் கார்டு வாங்கியபோதும், தொடர்ந்து இந்த வாரமும் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் கடந்த வாரம் அவருடன் மல்லுக்கட்டிய ஆயிஷா, இந்த வாரம் அவருக்கு அடிமையாகவே மாறிவிட்டதால் அவரும் டேஞ்சர் ஜோனில் தான் உள்ளார். இந்த மூவரில் யாரோ ஒருவர் தான் வெளியேறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!