• May 10 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் திகதியும் அறிவிச்சாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பானது பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. படத்தின் படப்பிடிப்பனது அண்மையில் தான் நிறைவடைந்ததோடு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.


ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. 


இதில் கலந்து கொண்ட இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம், இன்னும் 6 முதல் 9 மாதங்களில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement