விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இந்நிகழ்வானது தற்போது இரண்டு வாரங்களை வெற்றிகரமாக கடந்து இருக்கின்றது.
இந்நிலையில் வார இறுதியில் இந்நிகழ்ச்சியிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது வழமை. அந்தவகையில் நேற்றைய தினம் சாந்தி வெளியேறி இருக்கின்றார்.
இருப்பினும் இதில் ஜிபி முத்து தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய விருப்பத்தின் பேரில் விலகி சென்று விட்டார். மிச்சமாக 19 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் எஞ்சி உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்தினருக்கு தீபாவளி வாழ்த்துக்களினைக் கூறி இருக்கின்றனர். அதாவது மணிகண்டா கூறுகையில் "வழமையாக தன்னுடைய வீட்டில் தான் தான் பட்டாசு வெடிப்பதாகவும், இன்று தனக்குப் பதிலாக தனது மகன் வெடிப்பான்" எனவும் கூறி இருக்கின்றார்.
அதேபோன்றே ஜனனியும் தான் நன்றாக இருப்பதாக கூறி தனது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார். இவர்களை போன்றே ஏனைய போட்டியாளர்களும் தங்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக் கூறு கின்றனர். இருப்பினும் குடும்பத்தினரைப் பிரிந்து இருக்கின்ற ஏக்கம் அவர்கள் அனைவரினதும் முகத்தில் தெரிகின்றது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..!
Listen News!