• May 04 2024

300 இற்கு அதிகமான பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த இயக்குநர்... உடனடியாக கைது செய்த போலீஸார்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவின் சேலம் மாவட்டம் எடப்பாடி என்ற இடத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘நோ’ என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்றினை எடுப்பதாக எடுப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது அதில் நடிக்க நடிகைகள் தேர்வு செய்யப்படுவதாக கூறி தேர்வையும் நடத்தி வந்துள்ளார். 

இவர் சினிமாவில் எப்படியாவது தமக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், தாமும் நடித்து விட வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் இளம்பெண்களிடம் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாக ஆசைவார்த்தை கூறி மயக்கி உள்ளார்.


அதுமட்டுமல்லாது தான் எடுக்கும் இந்தப்படம் தேசிய விருதுக்கான படம் என்றும், அதில் தான் சொல்வது போல் நடித்தால் தான் விருது கிடைக்கும் என்றும் அந்த இளம்பெண்களின் பெற்றோர்களிடம் கூறி அவர்களின் அனுமதியோடு அந்த பெண்களை வசியம் செய்துள்ளார். 

அந்தவகையில் முதலில் அந்த பெண்களை கவர்ச்சியாக நிற்க வைத்து மோசமாக போட்டோஷூட் எடுத்துள்ள சத்ரியன், பின்னர் அவர்களை ஆடைகளை அவிழ்க்க சொல்லி நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களை பல கோணத்தில் வீடியோவும் எடுத்துள்ளார்.


அதுமட்டுமல்லாது அவர்களுக்கு நடிக்க கற்றுத் தருவதுபோல சில பெண்களிடம் உல்லாசமாக இருந்தும் வந்துள்ளார் சத்ரியன். அவ்வாறு அந்தப் பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து அந்த பெண்களை மிரட்டி பிளாக்மெயில் செய்து அவர்களின் கற்பையும், வாழ்க்கையையும் சீரழித்துள்ளார்.

இவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை, புதுச்சேரி, கோவை, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் என பல்வேறு ஊர்களில் இருந்தும் பல இளம்பெண்கள் வந்துள்ளனர். அவர்களை சீரழித்து அவர்களின் கற்பை சூறையாடி ஏமாற்றி உள்ளார். 


இவ்வாறான கொடுமைக்கார இயக்குநர் சத்ரியனின் இந்த காம லீலைகள் எல்லாம் கனகா என்கிற பெண் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. கனகாவும் சத்ரியனிடம் வாய்ப்பு கேட்டு சென்ற ஒருவரே. இவரை முதலில் தனது அலுவலகத்தில் வேலை செய்யுமாறு வேலைக்கு சேர்த்துக்கொண்ட சத்ரியன், சில நாட்கள் கழித்து கனகாவை ஆபாச படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். 

சத்ரியனின் நடவடிக்கையினை அவதானித்த கனகா தன்னை சுதாரித்துக் கொண்டு போலீஸில் புகார் அளித்திருக்கின்றார். இவரால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வேல் சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது ஆபாச படம் எடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதுமட்டுமல்லாது வேல் சத்ரியன் நடத்தி வந்த அலுவலகத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்கள், லேப்டாப், பெண்டிரைவ் மற்றும் கேமராக்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு போலிஸாரினால் பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளில் வேல் சத்ரியனால் ஏமாற்றப்பட்ட 300 இற்கும் அதிகமான இளம்பெண்களின் ஆபாச காட்சி அடங்கிய வீடியோக்கள் இடம்பெற்று உள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், அதில் இடம் பெற்றுள்ள இளம்பெண்களின் ஆபாச படங்கள், மற்றும் வீடியோக்களை வைத்து அவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இயக்குநர் செய்த இவ்விவகாரம் ஆனது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement