• May 04 2024

செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த விஷயம்... ஷாக் ஆன நடிகை... என்ன ஒரு தில்லு... சுற்றியிருந்தவங்க வேற டென்ஷன் ஆகிட்டாங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை க்ரிதி சனோன். திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ஒரு பெரிய கூட்டம் கூடி விடுவது வழமை. அதுமட்டுமல்லாது அவர்களுடன் செல்பி எடுக்க விரும்பி ரசிகர்கள் அலைமோதுவார்கள்.

ஆனால் அவர்களுடன் இணைந்து செல்பி எடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அந்தவகையில் பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் ஒருவர் செய்த காரியம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது .


அதாவது நடிகை க்ரிதி சனோனை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் அதிகம் கூடி இருந்த நிலையில் ஒரு குள்ளமான நபர் அக்கூட்டத்தின் நடுவில் புகுந்து செல்பி எடுக்க வந்தார். அந்த நபரை பார்த்து போட்டோகிராபர்கள் கிண்டல் செய்த நிலையில் நடிகை க்ரிதி சனோன் அந்த நபரை அருகில் வர வைத்து அவருக்காக கீழே வந்து அவரது போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.

ஆனால் அந்த நபர் செல்பி எடுத்த பின்னரும், அடுத்து கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என நடிகையை பார்த்து சொன்னதும் அவர் உடனே ஷாக் ஆகி விட்டார். அதுமட்டுமல்லாது சுற்றி இருந்தவர்களும் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டனர்


இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement