• Sep 17 2024

நடிகர் சூர்யா மீது வழக்கு தொடர்ந்த நபர்; இது தான் காரணமா..?அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு நவம்பர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இத்திரைப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கினார்.

மேலும், பிரகாஷ் ராஜ். ரஜிஷா, விஜயகுமார், லிஜோமால் ஆகியோர் நடித்துள்ளனர். 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்த இப்படம் தீபாவளி ஒட்டி நேரடியாக ottதளத்தில்வெளியானது.

இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று சர்ச்சையில் சிக்கியது. இத்திரைப்படம் 1993இல் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தின் அடிப்படையில் இருளர் சாதியை சேர்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியினரை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

குறிப்பாக வன்னியர்களை இப்படத்தில் இழிவுபடுத்தியதாக கூறி பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் ஆஸ்கார் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது ஜெய்பீம். குறிப்பாக ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தமிழ் சினிமாவின் இத்தகைய பெருமை பெற்ற முதல் படம் ஜெய்பீம் தான். இது தவிர பல்வேறு சர்வதேச பட விழாக்களில் விருதுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தின் கதையை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும் அதனை திருடி நடிகர் சூர்யா இயக்குநர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்து விட்டதாகவும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகர நடுவர் நீதிமன்றத்தில் குளஞ்சியப்பன் என்பவர் இந்த வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகின்ற ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement