• Dec 18 2025

விஜயாவுக்கே நாமம் போட்ட முத்து.. பதறியடித்து வீட்டில் போட்ட ட்ராமா? இறுதியில் ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டுக்கு கிளம்பும் போது மீனா தனது குடும்பத்துடன் வருகின்றார். இதனால் பேக்கை உள்ளே வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கின்றார். இதன்போது மீனாவின் அம்மா சத்யா பண்ணிய தப்புக்கு மன்னிப்பு கேட்கின்றார். அதேபோல சத்யாவும் விஜயாவிடம் மன்னிப்பு கேட்கின்றார். 

இதை தொடர்ந்து அம்மாவை வீட்டுக்கு வர சொல்லுமாறு முத்து சொல்ல, விஜயா அதற்கு எதிர்மாராக பேசுகின்றார். இதனால் அப்பா ஊருக்கு கிளம்பிட்டாரு.. அப்பாவின் பிரண்டு மனைவியும் இப்படித்தான் அவர விட்டுட்டு இருந்தாங்க.. கடைசில அவர் டிவோர்ஸ் பண்ணிட்டாரு.. அப்பாவுக்கும் அந்த எண்ணம் வந்துருமோ என்று பயமாயிருக்கு என கொளுத்திப் போட்டு வருகின்றார் முத்து.

d_i_a

இதனால் விஜயா முத்து போனதும் உடனடியாக நான் வீட்டுக்கு போகின்றேன் என்று கிளம்பி செல்கின்றார். அங்கு வீட்டுக்கு வந்த விஜயாவை வாசலிலேயே நிற்குமாறு முத்து சொல்லுகின்றார். அதன் பின்பு ஆர்த்தி எடுத்து உள்ளே அழைக்கின்றார்கள்.


இதன் போது அண்ணாமலை நான் சொல்லி கேட்காத நீ  சத்யாவின் கேசை எப்படி வாபஸ் வாங்கினா? என்று கேட்க, மீனாவின் மொத்த குடும்பமும் வந்து மன்னிப்பு கேட்டதால் தான் மனம் மாறியதாக சொல்லுகின்றார்.

ஆனாலும் ரவி அதற்கு முதலே நீங்கள் வாபஸ் வாங்கிட்டீங்களே என்று கேட்க, அப்பா சொன்னதை யோசித்துப் பார்த்தேன் என்று பிளேட்டை மாற்றுகின்றார். அந்த நேரத்தில் ரோகினி எவ்வளவு சொல்லியும் இப்படி வந்துட்டாங்களே என்று யோசிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement