தமிழ் திரையுலகில் நடிகர் அப்பாஸ் பல வருடங்களாக தனித்துவமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், அவர் தனது வாழ்க்கை, தொழில், மற்றும் சினிமாவில் எதிர்கொண்ட சவால்களை நேர்மையாக பகிர்ந்துள்ளார்.
நடிகர் அப்பாஸ் அதன்போது, “பெண்கள் மட்டும் தான் பாத் ரூம் கழுவணுமா? ஆம்பளைங்க கழுவக் கூடாதா? சில பேர் என்ன சார் கக்கூஸ் கிளீன் பண்ணிட்டீங்களான்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆமாபா சுத்தம் முக்கியம்லனு சொல்லுவேன். கிண்டல் பண்ணுறவன் யாரும் சோறு போடமாட்டான். ஆனா, நான் சினிமா வாய்ப்பு இல்லாம இருந்தப்ப அந்த விளம்பரத்துக்காக 8 வருஷம் ஒப்பந்தம் போட்டு நல்ல சம்பளம் கொடுத்தாங்க. அந்த காசு தான் எனக்கு சோறு போட்டது..” என்று கூறியிருந்தார்.

இந்த வெளிப்பாடு ரசிகர்களுக்கு உணர்ச்சி கலந்த எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தனது தொழில்துறையில் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி திறந்தமனமாய் பகிர்ந்தார்.
இந்த நேர்காணல் மூலம், நடிகர் அப்பாஸ் தொழில் வாழ்க்கையில் சந்தித்த நிஜமான போராட்டங்கள் மற்றும் அதை எவ்வாறு சமாளித்தார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Listen News!