• May 10 2024

சொல்றவன் சொல்லிக் கொண்டுதான் இருப்பான் இதெல்லாம் காதில வாங்க கூடாது- கோவை குணா அளித்த கடைசி பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

90 கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேராதரவைப் பெற்ற ரியாலிட்ரி ஷோ தான் கசத்தப் போவது யாரு. இதில் கவுண்டமணி,ஜனகராஜ் குரலில் பேசி தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் கோவை குணா.சொல்லப்போனால் பல மிமிக்ரி கலைஞசர்களுக்கு இவர் தான் முன்னோடியாக இருந்தார். 

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணற்ற போட்டியாளர்களுக்கு சினிமாவிடம் வாய்ப்பு கிடைத்தது. ரோபோ சங்கர் அமுதவாணன், பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி என்று பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கோவை குணா அவர்களுக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


ஆனால், இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை . அதேபோல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு தாவினார்கள். அப்போதும் கோவை குணாவும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் கடந்த சில ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரியாமல் தான் இருந்தது.

இதனால் பலரும் இவரைப் பற்றி இவரது தற்போதைய நிலை என்று பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் தான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார் கோவை குணா. அதில் பேசிய அவர் ”நான் நலமாக தான் இருக்கிறேன். நான் நலமாக இல்லை என்றால் இப்படி Gun மாதிரி உட்கார்ந்து பேச முடியுமா ? சொல்றவன் சொல்லிக் கொண்டுதான் இருப்பான் இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டு போயிட்டே இருக்கணும்.


நான் அப்போது உச்சத்தில் இருந்த நேரம் என்னை லிங்குசாமி சார் அழைத்தார், பிரபுசாலமன் சார் அழைத்தார். இவர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு பழக்கமானவர்கள் தான் . எனக்கு மிமிக்ரியை தவிர வேறு எதுவும் தெரியாது 36 ஆண்டுகளாக அதைத்தான் செய்து வருகிறேன் .கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் நான் மிகவும் பிஸியாகி விட்டேன் சிங்கப்பூர் மலேசியா எல்லாம் திருப்பூர் பொள்ளாச்சி போய்ட்டு வர மாதிரி ஆகிடிச்சி ‘ என்று பேசி இருந்தார். 


மேலும் அந்த பேட்டியில் இறுதியாக இது போன்ற மேடை கலைஞர்களை வாழ வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார் கோவை குணா இப்படி கடந்த மாதம் நலமுடன் இருப்பதாக பேட்டி கொடுத்த கோவை குணா தற்போது திடீரென்று மரணித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement