• May 05 2024

வந்தியந்தேவனிடமிருந்து வந்த ஓலை... என்ன எழுதி இருக்கு தெரியுமா...? பாராட்டு தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படமானது நேற்று முன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்று வருகின்றது. அந்தவகையில் முதல் நாளிலேயே அதிகாரப்பூர்வமாக உலகளவில் 80 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு 2ஆவது நாளில் 150 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் என்பது அருள்மொழி வர்மனின் பெயராக இருந்தாலும், இந்த கதையில் வந்தியத்தேவன் தான் ஹீரோ என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதாவது ஆதித்த கரிகாலன் சுந்தர சோழருக்கும் குந்தவைக்கும் தனித் தனியாக கொடுக்கும் இரு ஓலைகளை எடுத்துக் கொண்டு சோழ தேசம் நோக்கி வருவது தான் வந்தியத்தேவனின் வேலையே.



மேலும் வந்தியத்தேவன் எங்கெல்லாம் செல்கிறாரோ, அக்கதாபாத்திரத்தின் மூலமாகவே கதையை செலுத்தி அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை வாசகர்களுக்கு கொடுத்திருப்பார். அந்த வேலையை திரையில் மணிரத்னத்தின் உதவியுடன் சிறப்பாகவே செய்துள்ளார் கார்த்தி என பலரும் பெருமையுடன் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்துள்ள கார்த்தி தற்போது படக்குழுவினருக்கும் தனது ரசிகர்களுக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலமாக ஓலை ஒன்றினை அனுப்பி உள்ளார்.  

அதாவது "பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கி, அந்த கதையை இத்தனை ஆண்டுகளாக செதுக்கி இயக்கிய மணிரத்னம், பிரம்மாண்ட செட்கள் அமைத்த தோட்டா தரணி, இசையால் பிரம்மிக்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான். ரவிவர்மனின் ஒளிப்பதிவு, நடிகர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு என அனைத்துக்குமே நன்றி நன்றி நன்றி" என பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement