கேளடி கண்மணி தொடர்மூலம் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இடையில் காதல் மலர்ந்து இருவரும் லிவிங் டுகெதராக இருந்துள்ளனர். ஜந்து ஆண்டுகள் கதலித்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் திருமணமும் செய்துள்ளனர். ஆனால் திருமணமான விஷயத்தை வெளியில் கூறாமல் மறைத்துள்ளார் அர்னவ்.
இதனைத் தொடர்ந்து திவ்யா ஸ்ரீதரும் தங்களின் திருமணத்தை வெளியில் தெரிவிக்காமல் இருக்கவும் அர்னவ் வற்புறுத்தியதாக சொல்லப்படுகின்றது. இதனிடையே செல்லம்மா சீரியலில் நடித்துவரும் அர்னவ், அந்த தொடரின் மற்றொரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதால் தன்னை கழற்றிவிட முயற்சிப்பதாக திவ்யா ஸ்ரீதர் புகார் தெரிவித்திருந்தார்.
அத்தோடு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் கர்ப்பமாக இருக்கும் தனக்கு பிளீடிங் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தன்னுடைய வயிற்றில் உதைத்ததால் கரு கலைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் சொன்னதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே கருவை கலைக்கவே திவ்யா நாடகமாடுவதாக அர்னவ் பதில் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது இருவரும் ஒரே வீட்டில்தான் இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் தன்னுடைய அறைக்கதவை அர்னவ் உடைக்க முயற்சிப்பதாகவும் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் திவ்யா போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அர்னவிடம் விசாரணை மேற்கொண்டபோது, தன்னுடைய ஜிம் உபகரணங்களை எடுக்கவே தான் திவ்யாவின் அறைக்கதவை தட்டியதாக அவர் பதிலுக்கு தெரிவித்துள்ளார். எனினும் இதையடுத்து திவ்யா அறையில் இருந்த அர்னவின் பொருட்களை போலீசார் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.
அத்தோடு தம்பதிக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரையொருவர் இப்படி மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொள்வதும் அதற்காக எடுத்த எடுப்பிற்கெல்லாம்போலீசாரை அழைப்பதும் என்று இவர்களின் நடவடிக்கையால் நடு இரவில் மண்டை குழம்பிப் போய் போலீசார் திரும்பி சென்றுள்ளனர்.
Listen News!