தமிழ் சினிமாவின் 60களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் நம்பியார். இவர் ஆரம்ப கால கட்டத்தில் ஹீரோவாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நாயகனாக நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.ஆனால் அதுதான் அவரின் சினிமா வாழ்க்கைக்கே மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.தொடர்ந்து, பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார்.
அந்த வகையில் விய் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. இப்படத்தில் , நம்பியார் மற்றும் நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குநர் விக்ரமன் இயக்கியிருந்தார்.
அந்த சமயத்தில், சூட்டிங்கில் நம்பியார் சாப்பிடவே மாட்டாராம். அவருக்கென தனியாகவே சாப்பாடு வருமாம். இதனை கவனித்த விக்ரமன், என்ன சார் உங்களுக்கு மட்டும் தனி சாப்பாடு. எங்களுடன் சாப்பிடலாமே? என்றாராம். நம்பியாரோ அதில் ஒரு ரகசியமப்பா எனக் கூற, விக்ரமன் போங்க சார் எங்கள ஒதுக்குறீங்களா எனக் கேட்டே விட்டாராம்.
இப்படி இருக்க, அவருக்கு அடுத்த நாள் சாப்பாடு வந்திருக்கிறது. உடனே நம்பியார், இயக்குநரை கூப்பிடுப்பா என்றார். விக்ரமன் வந்தவுடன் வாங்க சாப்பிடலாம் என நம்பியார் அழைத்திருக்கிறார். ஓ தாராளமா சாப்பிடலாம் என்றாராம். ஆனால், சாப்பிடும் போது வேண்டாம் எனக் கூறவே கூடாது என்ற கண்டிஷனும் உட்கார வைத்தார்.
விக்ரமனுக்கு இவரே பரிமாறி இருக்கிறார். அதை சாப்பிட்ட, விக்ரமனுக்கு நெஞ்சே அடைத்து விட்டதாம். சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் என எதுவுமே இல்லையாம். அத்தனை கசப்பான சாப்பாட்டை தான் நம்பியார் சாப்பிடுவார். இதை சாப்பிட்ட விக்ரமன் ஒரு நாள் முழுதும் அதிக சீனியினை போட்டு வெறும் டீயினை மட்டுமே குடித்து முடித்தாராம். இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!