• May 09 2024

படம் ஃபிளாப் ஆனாலும் எனது ரேட்டு இது தான்...!! ஓகேனா சொல்லுங்க..! ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயரத்திய நயன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையான நயன்தாரா, முதன் முதலில் 'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, வல்லவன், ஈ, பில்லா, பில்லு, தனி ஒருவன், ஆதவன் போன்ற பல ஹிட் படங்களை பிரபல நடிகருடன்  கொடுத்திருந்தார்.

முதலில் நடிகர் சிம்புவை காதலித்து அதன் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர். அதன் பின் நயந்தாராவும் பிரபுதேவாவும் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். அதுவும் ஒர்க் ஆகாததால் அவரையும் விட்டுப் பிரிந்தார்.

இதை தொடர்ந்து 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழகத் தொடங்கி நயன்தாரா. அவரை ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, தற்போது தன் மகன்களுடன் பல போஸ்ட்களை போட்டுத் தள்ளி வருகிறார்.


இதை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வரும் நயன்தாரா, மாயா, டோரா, கொலை உதிர் காலம், அன்னபூரணி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. அதன் பின்பு பெண்களுக்காக அவர்கள் உபயோகப்படுத்தும் பியூட்டி பிசினஸிலும் இறங்கினார். இவ்வாறு படம் தயாரிப்பது, நடிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, பிசினஸ் என பல கோணங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.


கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளியது. அதைத் தொடர்ந்து டெஸ்ட், தனி ஒருவன் 2 , மண்ணாங்கட்டி போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார் நயன்தாரா. நீண்ட தோல்விக்கு பிறகு ஜவான் படம் நயனுக்கு ஒரு கம்பேக்காக இருந்தது.


இந்த நிலையில், புதிதாக ட்ரம்ஸ்டிக் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் செந்தில் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கமிட்டாகியுள்ளார். அத்துடன் இந்த படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை 10 தொடக்கம் 11 கோடி வரையில் உயர்த்தி உள்ளாராம்.

மேலும் தான் நடிக்கும் படம் எந்த பட்ஜெட்டாக இருந்தாலும் பரவாயில்லை, தனது சம்பளத்தை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என உறுதியாக உள்ளாராம் நயன். இவ்வாறு தனது  படங்கள் ஓடவில்லை என்றாலும் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement