• May 06 2024

அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள உதயநிதி... செய்யவுள்ள முதல் வேலை... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பிரபல தயாரிப்பாளருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். சினிமாவைத் தாண்டி இவர் தற்போது தற்போது அரசியலில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 


அந்தவகையில் இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது தான் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது டிசம்பர் 14-ஆம் தேதியான நாளை இவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார். அந்தவகையில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.


இவ்வாறு முதன்முறையாக அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதிக்கு திட்ட அமலாக்கத்துறை மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதுமட்டுமின்றி அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கலந்துகொள்ள உள்ள முதலாவது கோலாகலமான நிகழ்ச்சி குறித்தும் ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.


அதாவது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்க உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் 20-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதில் 48 நாடுகளைச் சேர்ந்த 107 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement