விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபல்யமான சீரியல்களில் ஒன்று 'சரவணன் மீனாட்சி'. அதே பெயரில் பின்னர் பல கதைகள் வந்தாலும் முதலில் வந்த ஜோடிக்கு தான் ரசிகர்கள் அதிகம். ஆம் அது வேறு யாருமில்லை செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் தான்.
சீரியலில் வந்த இவர்கள் நிஜத்திலும் இணைய வேண்டும் என மக்கள் ஆசைப்பட அப்படியே நடந்தும் முடிந்தது. அதாவது 2014 இல் அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து சீரியல்கள் நடித்தார்கள்.
அந்தவகையில் அதற்கு பிறகும் விஜய் டிவியில் 'மாப்பிள்ளை' என்ற சீரியலில் நடித்தனர். மேலும் 'கல்யாணம்: கண்டிஷன்ஸ் அப்ளை' என்ற வெப் சீரிசில் அவர்கள் இருவரும் மட்டும் நடித்தனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மூன்று சீசன்கள் ஓடியது.
இந்நிலையில் திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பம் ஆகி இருக்கிறார். அதுமட்டுமல்லாது இன்று ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்று இருக்கிறது.
அதன் போட்டோக்களை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார். இதனைப் பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் எனப்பலரும் அத்தம்பதியினருக்கு தமது வாழ்த்துக்களினை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!