ஒடிசா நடிகை பிரக்ருதி மிஷ்ரா மற்றும் நடிகர் பாபுஷான் மோஹன்டி இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக நீண்ட நாட்களாக சந்தேகப்பட்டு வந்த பாபுஷான் மோஹன்டியின் மனைவியும் துணை நடிகையுமான த்ரிபாதி சத்பாதி தனது கணவர் காரை தனது அண்ணன் உடன் சேர்ந்து ஃபாலோ செய்துள்ளார்.
நடிகை பிரக்ருதி மிஷ்ராவுடன் காரில் சென்றுக் கொண்டிருக்கும் போதே fணவர் அவருடன் நடந்த விதத்தை பார்த்து அதிர்ச்சியான த்ரிபாதி தாங்கள் சென்ற வண்டியை குறுக்கே விட்டு, கணவர் சென்ற காரை நிறுத்திய நிலையில், தனது அண்ணனை வைத்து கணவரை மடக்கி விட்டு, நடிகையின் தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளார்.
இதனை அங்கு கூடியிருந்த இளைஞர்கள் அந்த காரில் நடிகை இருப்பதை அறிந்ததும் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் கடுப்பான நடிகை பிரக்ருதியின் அம்மா புகார் அளித்துள்ளார்.அதில் பாபுஷான் மோஹன்டியின் மனைவி சில அடியாட்களுடன் வந்து காரை வழிமறித்து தனது மகளையும் நடிகர் பாபுஷானையும் தாக்கி உள்ளார் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 341, 294, 323, மற்றும் 506 பிரிவுகளின் கீழ் த்ரிபாதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாக்கியாவிடமே ராதிகா தான் என் உயிர் என்று கூறிய கோபி- அதிரடித் திருப்பத்துடன் பாக்கியலட்சுமி சீரியல்
- கருப்பு சட்டை ,பிளாக் அண்ட் ஒயிட் காமினேஷன் என தெறிக்கவிட்ட அல்லு அர்ஜுன்- புஷ்பா2 படத்தின் அப்டேட்டா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!