• Sep 20 2024

நினைதேன் வந்தாய் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! அவருக்கு பதில் யாரு தெரியுமா?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு என்றே பிரபலமான சேனல் தான் ஜீ தமிழ். சன் டிவி, விஜய் டிவி இதற்கு அடுத்ததாக ஜீ தமிழ் காணப்படுகின்றது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா, மாரி  நினைதேன் வந்தாய், கார்த்திகை தீபம் போன்ற சீரியல்கள்  மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியலுக்கு என்றே பெரும்பான்மையான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

அதிலும் நினைதேன் வந்தாய் சீரியல் நான்கு குழந்தைகளை வைத்து கதையை நகர்த்திச் செல்வதால் இந்த சீரியல்  இல்லத்தரசிகள் முதல் இளம்வட்ட ரசிகர்கள் வரை கவர்ந்துள்ளது. 


இந்த நிலையில்,  இந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் ஜாஸ்மின் ராத் நினைதேன் வந்தாய் சீரியலில் இருந்து திடீரென விலகி உள்ளார். தற்போது அவருக்கு பதிலாக பிக் பாஸ் பிரபலமான அபிராமி அவருடைய கேரக்டரில் நடிக்க உள்ளார். 

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதோடு சுடர் கேரக்டரில் நடித்த ஜாஸ்மின் எதற்காக விலகினார் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றார்கள். 


Advertisement

Advertisement