• May 19 2024

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை…கைது செய்த போலீஸார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சீரியல் நட்சத்திரங்களில் ஒருவரே நடிகை அஸ்வதி பாபு. அதாவது இவர் ஒரு சில மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். எனினும் தொடர்ச்சியாக இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தமையினால் இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்வதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் அவர் பதின்ம வயதிலிருந்தே போதைக்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகை அஸ்வதி பாபு 2018-ஆம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் போதை மருந்து பார்ட்டி நடத்தி போதைக்கு அடிமையான பல சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பெயரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.அதாவது கேரள போலீசார் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தி, கையும் களவுமாக அவரைப் பிடித்து கைது செய்தனர். எனினும் சில காலங்களின் பின்னர் ஜாமினில் வெளியே வந்து விட்டார்.

இதற்கிடையில் இவர் மறுபடியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது சில தினங்களிற்கு முன்னர் அஸ்வதி தனது காதலன் நௌபலுடன் கொச்சியில் போதையில் வேகமாக காரில் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் போதையில் இருந்தமையினால் தம்பதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை உண்டாக்கி நின்றது.

போலீஸார் வருவதற்கு முன்னர் காரில் தப்பியோட முயன்ற இருவரையும் அங்கு நின்ற பார்வையாளர்கள் அவர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். மேலும் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் அவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement