• May 09 2024

ஷங்கரின் மகளைக் காதலிப்பதாக கூறிய நடிகர்... அதுவும் பலரின் முன்னிலையில்... தந்தைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் பல பிரம்மாண்டமான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர். இவரைத் தொடர்ந்து இவரது மகளும் தற்போது சினிமாத் துறையில் கால் பதித்துள்ளார்.


அதாவது இவரது மகள் அதிதி தற்போது சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி அவர் நடித்துள்ள முதல் படமான 'விருமன்' ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தேன்மொழி எனும் கிராமத்து பெண் கேரக்டரில் அதிதி நடித்திருந்தார்.



இப்படத்தை பார்த்த பெரும்பாலானோர் கார்த்தியின் நடிப்பை பாராட்டினார்களோ இல்லையோ அதிதியின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். அவரின் நடிப்பை பார்க்கும் போது முதல் படத்தில் நடித்தது போல் இல்லை எனவும் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார் எனவும் பாராட்டி இருக்கின்றனர். அறிமுகப் படத்திலேயே தனது மகளின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதால் ஷங்கரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.



இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள கூல் சுரேஷ் கூறிய விடயம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது 'விருமன்' படத்தின் முதல் காட்சியை பார்த்த பின்னர் கூல் சுரேஷ் பேசும் போது தான் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாக கூறி பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார்.



இவர் இவ்வாறு கூறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமன்றி அதிதி ‘ஐ லவ் யூ’ என்ற வாசகம் அடங்கிய பதாகையையும் அவர் கையில் ஏந்தியபடி அந்த பேட்டியில் மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.



மேலும் அந்த பேட்டியில் தனது காதலை ஏற்றுக்கொண்டு தன்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளும் படியும் இயக்குநர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கூல் சுரேஷ். அதுமட்டுமன்றி தொடர்ந்து அவர் பேசுகையில் "உங்கள் படத்தில் வரும் காதலன், காதலியை சேர்த்து வைக்கும் நீங்கள் எனது காதலையும் சேர்த்து வைக்க வேண்டும்" என்றும் அந்த பேட்டியின் வாயிலாக இயக்குநர் ஷங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement