• May 04 2024

நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி- நேரடியாகவே சம்யுக்தாவை திட்டிய விஷ்ணுகாந்த்

stella / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த மார்ச் மாதம், சீரியல் பிரபலமான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஈரோட்டில் விஷ்ணு காந்த் குடும்ப முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், பெரிதாக பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக சம்யுக்தா தரப்பில் இருந்து 25 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக அவரே தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக கோவிலில் நடந்த நிலையில், பின்னர் விஷ்ணுகாந்த் வீட்டிற்கு அருகே உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் வரவேற்பு நடைபெற்றதாகவும் சம்யுக்தா கூறி இருந்தார்.


 மேலும் திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், பின்னர் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.தொடர்ந்து சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி தங்களுடைய பிரிவு குறித்தும், சாடி வருவதையும் பார்க்க முடிகிறது.

இப்படியான நிலையில் விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவுவொன்றைப் போட்டுள்ளார்.அதில் ஒருவரை நம்பி எனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி.


அதே  போன்று எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை யாராவது தகர்த்த நேர்ந்தால் அதையும் வெற்றுகாட்ட தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.இவரின் இந்தப் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement