• Jul 27 2024

கார்த்திக் விவகாரத்தில் சுசித்ரா தலையில் பேரிடி... அதிரடி தீர்ப்பளித்த ஐகோர்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக காணப்பட்டவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பாடிய பாடல்கள் பெரிதும் பேமஸ் ஆனது. அதன் பிறகு சுசி லீக்ஸ் என்ற விவகாரத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தனது கணவரை மட்டும் இன்றி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, திரிஷா, விஜய், அஜித், ஷாருக்கான் என முன்னணி பிரபலங்கள் அனைவர் பற்றியும் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு வந்தார்.


இந்த நிலையில், சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சுசித்ரா பேட்டி கொடுத்ததால் மான நஷ்ட ஈடு வழக்கு கோரி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடும்  தனக்கு கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதை தொடர்ந்து சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா, கார்த்திக் பற்றி கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது குறித்து தகவல் வைரலாக உள்ளது.

Advertisement

Advertisement