• May 09 2024

வைக்கோல் போரிற்கு நெருப்பு வைத்த ரவுடிக் கும்பல்... தீயில் சிக்கிய சூர்யா, வெண்ணிலா... இனி நடக்கப்போவது என்ன..? ப்ரோமோ வீடியோ இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த  கதைப்படி தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது குறித்த ஊரில் ஒரு பிரச்சினை ஏற்படவே சூர்யா அதை தட்டிக் கேட்கிறார். 


இதனால் சூர்யா மீது பயங்கர கோபம் கொள்ளும் ரவுடிகள் அவரை துரத்த ஆரம்பிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு வேகமாக செல்லும் சூர்யா ஒரு வைக்கோல் போருக்குள் நுழைந்து தப்பிக்கிறார். அந்த வைக்கோல் போரில் காரில் வெண்ணிலாவும் சூர்யாவும் நாள் முழுக்க அமர்ந்திருக்கின்றனர். 


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யாவும், வெண்ணிலாவும் வைக்கோல் போரிற்குள் ஒளிந்திருப்பதை ரவுடிகள் கண்டு பிடித்து விடுகின்றனர். உடனே அந்த வைக்கோல் போரிற்கு பெற்றோல் ஊற்றி நெருப்பு வைக்கின்றனர். இதனால் அந்த வைக்கோல் போர் பற்றி எரிகின்றது. இதனையடுத்து வெண்ணிலா, சூர்யாவிற்கு என்ன ஆச்சு என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement