• Apr 01 2025

பாலிவுட்டில் புதிய அவதாரம் எடுக்கும் சுந்தர்.சி... அங்கும் அரண்மனை கதை? சிக்கிய ஹீரோ யாரு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கியத்தில் உருவாகிய படம் தான் அரண்மனை. இதன் நான்காம் பாகம் பொங்கல் பண்டிகை ஒட்டி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனாலும் இந்த படத்தின் ரிலீஸில் அடுத்தடுத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை நான்காம் பாகத்தில் சுந்தர்.சி லீட் கேரக்டரில் நடித்துள்ளதோடு, அவருக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ராசி கன்னா  உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளதாக கூறிய ரெட் ஜெயண்ட்  மூவிஸ் நிறுவனம் இதிலிருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த படத்திலும் கமிட் ஆக முடியாத நிலையில் சுந்தர்.சி தவிப்பதாக கூறப்பட்டது.


இவ்வாறான நிலையில் தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்க கமிட் ஆகியுள்ளார் சுந்தர்.சி.. அதன்படி பாலிவுட்டின் பிரபல ஹீரோ அக்ஷய் குமாருடன் இணைந்து அடுத்த படத்தை இயக்க உள்ளாராம்.


இது பெரும்பாலும் அரண்மனை படத்தின் ஒரு பாகத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அக்ஷய் குமார் லீக் கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement