• May 18 2024

அபியின் குழந்தை தான் சுடர் என்பதை அறிந்து கொண்ட வெற்றி - இனி நடக்கப் போவது என்ன?- விறுவிறுப்பான திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் இன்றைய தினம் வெற்றிக்கு சுடர் ஆக்சிடென்ட் ஆன விஷயம் தெரிந்து விட்டது.

இதனால் பதடி அடித்துக் கொண்டும் சுடர் இருக்கும் ஹாஸ்பிட்டல் பற்றியும் அறிந்து கொண்டும் வெற்றி சுடரைப் பார்க்க வருகின்றார். ஆனால் வெற்றி ரௌடி என்தபதால் சுடரைப் பார்க்க அனுமதிக்கவில்லை.பின்னர் தொடர்ந்து  விஜி அழைத்து உங்க குழந்தை தானெ உள்ளே பார்க்க அனுமதியுஙக என்று சொல்ல விஜி சமாளித்து இல்லை வெற்றி நீங்க போங்க என்று அனுப்புகின்றார்.


இது ஒருபுறம் இருக்க  சுடரை யாரும் கொலை செய்திருவாங்களோ என்ற பயத்தில் அபி கத்தியதில் மய்கி விழுந்ததில் அவரும் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார். அவரைப் பார்க்க அபியின் அப்பாவும் பெரியம்மாவும் வந்திருந்தனர். மேலும் வெற்றி அபி உள்ளே இருப்பதால் தான் தன்னை சுடரை பார்க்க விடவில்லை என்று நினைத்து போலிஸிடம் சண்டை போடுகின்றார்.


நான் போராட்டம் நடத்துவேன். கலெக்டருக்காக நான் ஏன் குழந்தையை பார்க்காமல் இருக்கனும் என்று சொல்ல கலெக்டர் போன காரில் தான் சுடரும் போன விஷயத்தை போலிஸ் சொல்ல வெற்றி அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து பேசிய போலிஸ் கலெக்டரின் பொண்ணு தான் சுடர் என்று சொல்ல வெற்றி கேட்டு அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது. இதனால் அபியின் குழந்தை தான் சுடர் என்பது வெற்றிக்கு தெரிய வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement