• Apr 28 2024

ஃபர்ஸ்ட் நைட் சீனில் நடிக்க சொன்னது கோபம் தான்.. ஆனா இப்ப கூட செல்வா கூப்பிட்டா போயிடுவேன்: சோனியா அகர்வால்

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் செல்வராகவனின் வெற்றி திரைப்படங்களில் ஒன்றான ’புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக இருந்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் தற்போது ’புதுப்பேட்டை 2’ படத்தில் சோனியா அகர்வால் மீண்டும் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோனியா அகர்வால் கூறிய போது ’தொழில் என்பது வேறு, கணவன் மனைவி உறவு என்பது வேறு, இப்ப கூட செல்வா கூப்பிட்டால் கண்டிப்பாக நான் ’புதுப்பேட்டை 2’ படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன், ஆனால் இதுவரை எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்று கூறினார்.

ஏற்கனவே ’புதுப்பேட்டை’ முதல் பாகத்தில் ஃபர்ஸ்ட் நைட் சீன் எடுக்கும் போது எனக்கு கொஞ்சம் கோபமாக தான் இருந்தது, இந்த சீன் எதற்காக இந்த படத்திற்கு? என நான் அந்த காட்சியை எடுக்கும் போது யோசித்தேன். ஆனால் படம் பார்க்கும்போது இந்த சீன் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.



செல்வா ஒரு பர்பெக்ஷனான இயக்குனர், அவர் மனதில் நினைப்பதை காட்சியாக வரும் வரை எத்தனை டேக் ஆனாலும் விடமாட்டார். அவரை விட்டு நான் ஒரு மனைவியாக பிரிந்து விட்டாலும் மீண்டும் ஒரு நடிகையாக அவரிடம் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன், எனக்கு அழைப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

’புதுப்பேட்டை 2’ படத்தில் தனுஷ் மற்றும் சினேகா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சோனியா அகர்வால் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement