• May 18 2024

ஜனனியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா...பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பு-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளிபரப்பாகி வருகிறது.இவ்வாறுஇருக்கையில் வித்தியாசமான டாஸ்களை கெடுத்து வருகின்றார் பிக்பாஸ்

அந்த வகையில் கதை சொல்லும் நேரம் என பெயரிடப்பட்டுள்ள டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதில்  போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கதை சொல்ல வேண்டும். 

மேலும் அவர்கள் சொல்லும் கதை பிற ஹவுஸ்மேட்ஸை கவர வேண்டும். அதுமட்டுமின்றி கதையை முழுவதுமாக சொல்லி முடிப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஜனனி கதை சொல்லும் டாஸ்கில் கலந்து கொண்டு கதையை கூறுகின்றார்.

அதில் பார்க்கிற ஆட்கள் எல்லோரும் என்ன இந்தப்பிள்ளை சிரித்திட்டே இருக்கும் இந்த பிள்ளைக்கு பிரச்சனையே இருக்காத எனக் நினைப்பார்கள்.இவாவுக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகுது என்று  நினைப்பார்கள்.ஆகால் அப்படி எல்லாம் இல்லை..நான் படித்துக்கொண்டு இருக்கும் போதே வீட்டை நான் தான் பார்க்க வேண்டும் என்ற நிலை வந்திட்டு எனக் கூறும் போதே அவரை அந்த டாஸ்கை தொடர முடியாமல் பண்ணி விட்டார்கள்.கடைசியில் அவர் கண்ணீர்வடித்து அழ ஆரம்பித்து விட்டார்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement