• May 13 2024

48 வயதில் இத்தனை அழகா- பொன்னியின் செல்வன் டீசரை ஐஸ்வர்யாவுக்காக ரிப்பீட் மோடில் பார்த்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

1950 களில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அப்படியே சினிமாவாக இயக்க வேண்டும் என பலரும் முயற்சி செய்திருந்த நிலையில் அந்தக் கனவை இயக்குநர் மணிரத்னம் நிறைவேற்றியுள்ளார். வரலாற்றுக் காவியமாக உருவாகிய இப்படம் செப்டம்பர் 30 ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

மேலும் நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் டீசரும் வெளியாகி ரசிகர்களின்ஆதரவைப் பெற்று வருகின்றது. இப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட போது வந்தியத்தேவன், குந்தவை, ராஜ ராஜசோழனை கேட்டவர்கள் டீசரில் ஐஸ்வர்யா ராயை பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் உள்ளனர்.

ஐஸ்வர்யா ராயும், த்ரிஷாவும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில் இவர் முகம் பாதி, அவர் முகம் பாதி என காட்டப்பட்டிருப்பது, இருவரில் யார் அழகு என அனைவரையும் ஒரு நிமிட திகைத்து போக வைத்து விட்டது. அதைவிட விக்ரம் வசனம் பேசும் போது, ஐஸ்வர்யா ராயின் க்ளிப்பிங்ஸ் காட்டப்படும். அந்த ஷாட்டை பார்த்து "யப்பா…என்ன அழகு" என சொக்காதவர்களே இருக்க முடியாது.

48 வயதில் இத்தனை அழகா என பாராட்டி வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் வரும் ஷாட்களை மட்டும் எடுத்து சிலர் வைரலாக்கி வருகின்றனர்.ஐஸ்வர்யா ராயின் அழகை பார்ப்பதற்காகவே பலரும் பொன்னியின் செல்வன் டீசர் ரிப்பீட் மோடில் பார்த்து வருவதாக கூறி வருகின்றனர்.

இதனால் நேற்று முதல் #AishwaryaRaiBachchan என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. நந்தினி ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை பார்த்ததும் முதலில் ஜோதா அக்பர் பார்ட் 2 எடுத்திருக்காங்களா, வில்லி ரோல் ஐஸ்வர்யாவிற்கு செட் ஆகும் என பலரும் பலவிதங்களில் சந்தேகங்களை கிளப்பினர்.

ஆனால் டீசர் வெளியான பிறகு பிரம்மாண்டம், போர்க்களம், சோழர்களின் வரலாறு போன்றவற்றை தாண்டி ஐஸ்வர்யா ராயின் அழகு அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இந்த அழகோடு வில்லத்தனம் கலந்தால் எப்படி இருக்கும் என கர்ப்பனை செய்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement