• May 04 2024

தாமரைக் குளத்தின் நடுவே தாரகையாய் மின்னும் சினேகா... வெளியான பிறந்தநாள் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் சரி, அழகிலும் சரி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. ரசிகர்களால் புன்னகை அரசி என சிறப்பாக அழைக்கப்பட்டு வந்த இவர் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக விஜய், முரளி, பிரசாந்த், பிரபு,  எனப் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.


இவ்வாறாக பல படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த சினேகா திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் இணைந்து குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் தம்பதி என்றால் அது நம்ம சினேகா - பிரசன்னா ஜோடி தான்.


அதாவது கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இக்காதலானது கல்யாணத்திலும் சென்று சேர்ந்தது. அதாவது இருவீட்டார் சம்மதத்துடன் திரையுலகினர் புடைசூழ இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.


குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு அழகாக மாறி உள்ளார்.


இந்நிலையில் சினேகா நேற்றையதினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இப்பிறந்தநாள் ஸ்பெஷலாக தாமரைக் குளம் ஒன்றிற்கு சென்று புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.  அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement