• May 06 2024

பிரசன்னாவுக்கு முன்னர் தயாரிப்பாளருடன் உறவில் இருந்த சினேகா... பகீர் கிளப்பிய பயில்வான்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனப் பெயர் எடுத்தவர் தான் நடிகை சினேகா. 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தனர். 


அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அந்த நட்பு காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.


இவ்வாறாக இவர்கள் இருவரும் சந்தோசமாக தமது குடும்பத்துடன் இருந்து வரும் நிலையில் சினேகா குறித்து பகீர் கிளப்பும் தகவல் ஒன்றினைக் கூறியுள்ளார் பயில்வான். அதாவது பிரசன்னாவை காதலிக்கும் முன்பே சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் ஆனால் அது பின்னர் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பயில்வான் விரிவாக கூறுகையில் "பிரசன்னாவிற்கு முன்னரே சினேகா நாக் ரவி என்கிற தயாரிப்பாளரை காதலித்திருந்தார், இவர்கள் இருவரும் வைர மோதிரம் மாற்றி நிச்சயம் கூட செய்துகொண்டார்கள். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் குறித்த காதலர் தனக்கு உண்மையாக இல்லை என்பதை சினேகா புரிந்துகொண்ட அந்தத் தயாரிப்பாளருடனான காதல் உறவை முறித்துக்கொண்டார். 


இதன் பின்னர் சிநேகாவிற்கு திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு திருமணமே வேண்டாம் என்றளவிற்கு முடிவெடுத்தார். ஆனாலும் பின்னர் பிரசன்னாவின் மேல் சினேகாவிற்கு காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர்" என பயில்வான் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement